IND PAK Melbourne Weather Forecast: இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அக்.23ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மெல்போர்ன் பகுதியில் வானிலை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, அன்றைய தினம் காலை மற்றும் மாலை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்-ஐ காண ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
இதனால் டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டன.
இந்த நிலையில் வானிலை மிரட்டும் வகையில் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இந்தக் காலக்கட்டத்தில் மெல்போனில் இயற்கையாகவே மழை பொழியும்.
ஆகையால் போட்டியை வேறு தினத்துக்கு மாற்றி வைத்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இது பற்றி ரோகித் சர்மாவிடம் கேட்டபோது. “இதுதான் அட்டவணை. இது பற்றி எனக்கு தெரியாது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட நாங்கள் தயாராக உள்ளோம். சிறந்த திறமையை வெளிப்படுத்துவோம்” என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புகள் உள்ளன என்று வெளியாகும் செய்திகள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“