இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஷர்துல் தாகூர் ஆடும் லெவனில் இடம் பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரில் அசத்தியது. முதல் 5 ஒருநாள் போட்டிகளில் 4-ஐ வென்று, தொடரையும் கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி இன்று (16-ம் தேதி) செஞ்சூரியனில் நடந்தது.
இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் ஜெயித்தார். இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர் ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணியில் கிரிஸ் மோரிஸ், சொண்டோ, இம்ரான் தாகிர் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வழக்கம்போல அம்லாவும், கேப்டன் மார்க் ராமும் களம் இறங்கினர். இந்த ஆட்டத்தின் LIVE UPDATES
சீரான வேகத்தில் ரன்களை குவித்து வந்த தென் ஆப்பிரிக்க அணி, 6.3 ஓவர்களில் 23 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. சீனியர் வீரரான அம்லா, இந்திய இளம் பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் லெக்சைடில் வீசிய பவுன்சரை அடிக்க முயன்று விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார்.