டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவரின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை:
இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.
சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துக் கொண்டதை அவரின் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடம் என பல சாதனைகளை செய்திருந்த சானியாவுக்கு இந்த விமர்சனங்கள் மனவேதனையை ஏற்படுத்தினர்,
இருப்பினும், தான் எடுத்த முடிவில் நிலையாக நின்ற அவர், தொடர்ந்து இந்தியாவிற்காக விளையாடி வந்தார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு அதிரடியான பதில்களையும் பதிவு செய்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக கடவுளுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் 31 வயதான சானியா மிர்சாவிற்கு தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது.
Excited to announce: Its a boy, and my girl is doing great and keeping strong as usual #Alhumdulilah. Thank you for the wishes and Duas, we are humbled ???????? #BabyMirzaMalik ????????
— Shoaib Malik ???????? (@realshoaibmalik) 30 October 2018
இந்த தகவலை சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். சானியா மிர்சா- சோயிப் மாலிக் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.