Advertisment

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 7 பதக்கங்கள் : காரணம் என்ன?

Tamil Sports Update : ஒலிம்பிக் போட்டியில் நேற்று தனது கடைசி நாள் பயணத்தை தொடங்கிய இந்தியா தடகளத்தில் பதக்கம் வென்ற சாதனையுடன் நிறைவு செய்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 7 பதக்கங்கள் : காரணம் என்ன?

Tokyo Olympic Indian Medal Update : உலகின் மிகப்பெரிய விளையாட்டுத்திருவிழா ஒலிம்பிக். 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருவது வழக்கம்.  இந்த போட்டி  தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் தொடக்க அணிவகுப்பு நிகழ்ச்சியில், போட்டியில் பங்கேற்றும் நாடுகளின்  விளையாட்டு அடையாளத்தைப் பற்றிய தெளிவான சுருக்கம் தெரிவிக்கப்படும். பல வருடங்களாக, இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

Advertisment

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 8 முறை தங்கத்தை வென்ற நாடு என்ற பெருமை பெற்ற இந்தியா கடைசியாக 1980 ல் தங்கம் வென்றிருந்தது. அதன்பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில்  துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன் ஆகியவற்றில்  இந்தியா பதக்கங்களை வென்றது. ஆனால் அது ஒலிம்பிக் தாய் விளையாட்டுகளாக தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்லவில்லை. ஆனால் தற்போது இந்த நிலை மாறியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று தனது கடைசி நாள் பயணத்தை தொடங்கிய இந்தியா தடகளத்தில் பதக்கம் வென்ற சாதனையுடன் நிறைவு செய்தது. ஈட்டி எரிதலில் இந்தியவின் இளம் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 87.48 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். இதுவே தடகளத்தில் இந்தியா பெற்ற முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கம்மாகும். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலங்கப்பதக்கம் உட்பட 7 பதக்கத்துடள்  டோக்கியோவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தது.

இதில் கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 6 பதக்கங்கள் வென்றது. தற்போது அதிகபட்சமாக ஒரு பதக்கம் 7 பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்துள்ளது. வரலாற்றை உருவாக்குவது என்னவென்றால், தியான் சந்த் சகாப்தத்திற்குப் பிறகு, 23 வயதான நீரஜ் சோப்ரா நேற்று செய்த சாதனைபோல வேறு யாரும் இதுவரை செய்யவில்லை என்று சொல்லும் அளவுக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்திய நிறைவு செய்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு பதக்கத்தைத் வென்ற நிலை ஒரு தனித்துவமான கதையைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவர்களில் அனைவரிடம் இருந்து பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை கடந்த விளையாட்டு வீரர்களிடம் ஒலிம்பிக்கில் இருப்பதே இலக்காக இருந்தது. ஆனால் பதக்கம் வென்ற பிறகு அவர்களிடம் இருந்து தனித்துவமான கருத்து நிலவுகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியாவை கூறலாம், அவர் ஒரு கட்டத்தில், தங்கம் வெல்லாததால் மிகவும் பதற்றமடைந்தார், இது தொடர்பாக ஒரு செய்தியாளருக்கு தனது பதக்கத்தை வெறுமனே பார்க்கும்படி கேட்டார். "என்னிடம் வெள்ளி இருக்கிறது என்ற உண்மையுடன் நான் வாழ வேண்டும்," என்று அவர் கூறினார்.

அது அவர் மட்டுமல்ல. குத்துச்சண்டை வீரர் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றதற்காக கண்ணீர் விட்டார். ஆனால் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற ஒரே பெண் பிவி சிந்து மற்றொரு ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததில்  வருத்தப்பட வேண்டுமா அல்லது ஒலிம்பிக்போட்டியில்  மற்றொரு பதக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

பிரிட்டனிடம் வெண்கலப் பதக்கத்தை இழந்த இந்திய ஹாக்கி அணியில், இடம்பெற்றிருந்த  கோல்கீப்பர் சவிதா புனியா ஆடுகளத்தில் அழுதார்.  உண்மையில், டோக்கியோவுக்குச் சென்ற , ​​இந்திய ஹாக்கி அணி நவம்பர் 2019 முதல் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. மேலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது அரை டஜன் வீரர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா இரண்டாவது அலை கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியக் குழுவினரின் பயிற்சிகளையும் சிதைத்துவிட்டது.

ஆனால் அரசு, கூட்டமைப்புகள் மற்றும் தனியார் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ள வீர்ர் வீராங்கனைகளின் திறமைகள் அதிகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டன. அதன்படி பளு தூக்குபவர் மீராபாய் சானு இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தத் தொடங்கியபோது உடனடியாக அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். ஒலிம்பிக் வரை அவள் அங்கேயே இருந்தாள்.

அடுத்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும், விளையாட்டுக்காக தயாராவதற்காக ரஷ்யாவில் தங்கியிருந்தார். ஒட்டுமொத்த ஒலிம்பிக் குழுவும் குரோஷியாவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் பயிற்சிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்தது.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சிலர், தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் முக்கியமானவர் கோல்ப் வீராங்கனை  அதிதி அசோக், கோவிட்-க்குப் பிறகு அவரது வலிமை கணிசமாகக் குறைந்து வருவதை பார்க்க முடிந்தது, இது அவரது ஆட்டத்திலும் தென்பட்டது. ஆனாலும் உலகின் மிகச்சிறந்த கோல்ப் வீராங்கனைகளுக்கு அவர் சவாலாக இருந்தார்.

இந்த போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூட கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு அவநம்பிக்கையான மனிதராகத்தான் இருந்தார். காயமடைந்த அவர் கடந்த ஆண்டு அவர் குணமடைந்தபோது, ​​தொற்றுநோய் தாக்கியது மற்றும் இதனால் ஒரு வருடம் வீணாகிவிட்டது, இந்த நிலை இரண்டாவது அலையைத் தொடர்ந்து இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை நீடித்தது.

இதனால் அவர் தனக்கு பயிற்சி வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, டோக்கியோவுக்குச் செல்வதற்கு முன், அவர் பிரான்ஸ், சுவீடன் மற்றும் பின்லாந்தில் பயிற்சி பெற்று போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடாந்து நேற்று (சனிக்கிழமை) சோப்ரா சரியான வடிவத்தில் விளையாடி ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். அவரது துறையில் எல்லா காலத்திலும் சிறந்த வீர்ர்களின் ஒருவராக ஜெர்மனியின் ஜோஹன்னஸ் வெட்டர் இருந்த போதிலும், சோப்ரா கவலைப்படாமல் விளையாடி அசத்தியுள்ளார்.

அதே போல் ஹாக்கி அணியும் 41 வருட காத்திருப்புடன் ஒலிம்பிக் பதக்கத்துக்காக பலமான ஜெர்மானியர்களை வீழ்த்தி வெண்கலம் வென்றது. உணர்வுபூர்வமான காரணங்கள் ஒருபுறம் இருக்க, முதல் எட்டு அணிகளில் ஏதேனும் ஒன்று மற்றொன்றை வெல்லும் திறன் கொண்டதாக இருப்பதால், இந்த பதக்கம் வீரர்களுக்கு இன்னும் நிறைய அர்த்தத்தை கொடுக்கும் டோக்யோ வெண்கலம் ரியோவில் வெள்ளியை விட கடினமானது என்பதை இரண்டு காரணங்களுக்காக ஒப்புக் கொண்ட சிந்துவின் விஷயமும் அதேதான்.

டோக்கியொ ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் அவர் மீது வைக்கப்பட்டன, மேலும் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டனின் தங்க தலைமுறையாக கருதப்படுவதை எதிர்த்து அவர் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார். கோவிட் இரண்டாவது அலை தாக்கியதில் இருந்து சிந்து உண்மையில் சுய-தனிமையில் இருந்தார். இது பெரும்பாலான இந்திய விளையாட்டு வீரர்கள் பகிர்ந்து கொண்ட அவல நிலை. இது சாதனைப் பதக்கங்களை இன்னும் குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது.

இதில் தங்கம் வென்ற சோப்ரா இரண்டு வருடங்களுக்கு சரியான போட்டி இல்லாமல் இருந்தார். மூன்று ஆண்டுகளில் பாரிஸ் வரும்போது அவர் எவ்வளவு திறமையாக இருக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். தஹியா மற்றும் லோவ்லினா அவர்களின் பதக்கங்களின் நிறத்தை மாற்ற எவ்வளவு கடினமாக பயிற்சி செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். டோக்கியோ ஒரு தேசத்தை கற்பனை செய்ததை சற்று எளிதாக்கியுள்ளது என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tokyo Olympics Neeraj Chopra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment