Tamil thalaivas defeated by Bengaluru bulls: புரோ கபடி தொடர் 7 வது சீசனில் பெங்களூரு புல்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை 32 - 21 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
புரோ கபடி தொடரின் 7வது சீசன், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழ் தலைவாஸ் பெங்களூரு புல்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத விளையாட வேண்டும். அதனபடி லீக் சுற்று (132 ஆட்டங்கள்) முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றும் சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.
அதன்படி, புரோ கபடி 7வது சீசன் போட்டிகள் மொத்தம் 12 இடங்களில் நடைபெற உள்ளன. இதில், ஐதராபாத், மும்பை, பாட்னா, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடந்துமுடிந்துள்ளன. அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் சென்னையில் வரும் 23ம் தேதிவரை நடைபெற உள்ளன.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் இன்று தமிழ் தலைவாஸ் அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் விளையாடியது. இதில் தமிழ் தலைவாஸ் அணியை பெங்களூர் புல்ஸ் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் 21 புள்ளிகளை எடுத்தது. பெங்களூர் புல்ஸ் அணி 32 புள்ளிகளை எடுத்தது. இதனால், 11 புள்ளிகளைக் கூடுதலாக பெற்ற பெங்களூர் புல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதுவரை, தமிழ் தலைவாஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியும், ஒரு டையும் கண்டிருந்த நிலையில் மேலும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.