Advertisment

திருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டம்: 6-வது வெற்றியை ருசித்தது தூத்துக்குடி

திருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டம்: 6-வது வெற்றியை ருசித்தது தூத்துக்குடி

திருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisment

இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. எட்டு அணிகளும் தலா ஒரு முறை லீக் போட்டிகளில் வேண்டும். லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி அணியும், திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தூத்துக்குடி தரப்பில் கணேஷ் மூர்த்தி 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் சும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய தூத்துக்குடி அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை தோல்வியே சந்திக்காத தூத்துக்குடி அணி தொடர்ச்சியாக தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tnpl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment