Advertisment

U-19 உலகக் கோப்பையை நான்கு முறை வென்று இந்தியா புதிய வரலாறு! பெருமை சேர்த்த நான்கு கேப்டன்கள்!

ஒட்டுமொத்தமாக, U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
U-19 உலகக் கோப்பையை நான்கு முறை வென்று இந்தியா புதிய வரலாறு! பெருமை சேர்த்த நான்கு கேப்டன்கள்!

நியூசிலாந்தின் மவுன்ட் மவுங்கனுயி நகரில் இன்று நடைபெற்ற U-19 உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி கோப்பையை வென்றது.

Advertisment

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, 216 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, எளிய இலக்கை சவாலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விரட்டிய இந்தியா, 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 38.5வது ஓவரில் எட்டியது.

இதன் மூலம் U-19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நான்காவது முறையாக உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.

உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த இந்திய U-19 கேப்டன்கள்:

2000 - முகமது கைப்

2008 - விராட் கோலி

2012 - உன்முக்த் சந்த்

2018 - ப்ரித்வி ஷா

மேலும், இன்றைய போட்டியின் மூலம் U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார். அவர் 101* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த் 111* ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார்.

Indvsaus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment