விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி கடந்த திங்கட்கிழமை இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், திருமண பரிசாக பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஓடிஸா கடல் பகுதியில் மணலில் அவர்களின் சிற்பம் வரைந்து, அதனை க்ளிக் செய்து, விருஷ்கா ஜோடிக்கு ட்வீட்டியுள்ளார். இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கு பதில் அளித்துள்ள அனுஷ்கா ஷர்மா, "இந்தப் படம் மிகவும் அழகாக உள்ளது. நாங்கள் இருவரும் மகிழ்ந்தோம். உங்களுக்கு நன்றி" என பதில் ட்வீட் செய்துள்ளார்.