Advertisment

தற்கொலை செய்து கொண்ட விராட் கோலி ரசிகர்!

முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான விராட் கோலியின் ரசிகர் ஒருவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
தற்கொலை செய்து கொண்ட விராட் கோலி ரசிகர்!

தென்னாப்பிரிக்கா உடனான முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான விராட் கோலியின் ரசிகர் ஒருவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisment

கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், கேப்டன் விராட் கோலி 5 ரன்னில் அவுட்டானதை பாபுலால் பரியா என்ற அந்த வயதான ரசிகர் டிவியில் பார்த்து இருக்கிறார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தீவிர கோலி ரசிகரான பாபுலால், ஐந்து ரன்னில் அவர் அவுட்டானதும் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தனக்கு தானே தீயிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், 'கோலியின் விக்கெட்டால் ஏமாற்றம் அடைந்து தற்கொலை செய்து கொண்டேன்' என தெரிவித்து இருக்கிறார். இதனை காவல்துறை உதவி ஆய்வாளர் பியார்சிங்கும் உறுதி செய்துள்ளார்.

ரயில்வேஸில் பணியாற்றி பாபுலால் ஓய்வு பெற்றவர். இவரது இரு மகன்களில் ஒருவரும் கடந்த 2009ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment