Advertisment

மலேசிய அணியை 27 ரன்னில் சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

மலேசிய அணியை 27 ரன்னில் சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மலேசிய அணியை 27 ரன்னில் சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், வினிஃப்ரெட் துரைசிங்கம் தலைமையிலான மலேசிய அணியும் மோதின.

Advertisment

இதில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை மித்தாலி ராஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 97 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். கேப்டன் ஹர்மன்ப்ரீத் 23 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மலேசிய அணி, 13.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்களில் சுருண்டது. ஆறு வீராங்கனைகள் 0 ரன்னில் அவுட்டானார்கள். ஒருவர் கூட இரட்டை இலக்கை தாண்டவில்லை.

இதனால் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிப் பெற்றது.

Harmanpreet Kaur Mithali Raj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment