சிங்கப்பூர், ஐஸ்லாந்து உள்பட 10 நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். 10 நாடுகளுக்கான இந்திய தொழில்துறை தூதர்கள் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். தொடர்ந்து ராஜ்பவன் சென்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினர்.
சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய துாதர் பி.குமரன், நைஜீரியா நாட்டின் இந்திய துாதர் ஜி.பாலசுப்ரமணியன், ஐஸ்லாந்து நாட்டின் இந்திய துாதர் பி.ஷ்யாம், சூடானுக்கான தூதர் பி.எஸ். முபாரக், கியூபாவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜானகிராமன், பப்புவா நியூகினியா நாட்டிற்கான இந்திய துாதர் எஸ்.இன்பசேகர், பிஜி நாட்டிற்கான இந்திய துாதர் பி.எஸ். கார்த்திகேயன், மலாவி நாட்டின் இந்திய துாதர் எஸ். கோபாலகிருஷ்ணன், சுரினாம் நாட்டிற்கான இந்திய துாதர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் டிஜிபூட்டிக்கான தூதர் ஆர்.சந்திரமௌலி ஆகியோர் முதல்வரை சந்தித்துப் பேசினர்.
நேற்று தலைமை செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உடன் இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“