மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் தினக்கூலி தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமும் ஒன்று. இத்திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 204 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நூறு நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி தமிழகத்தில் 205 ரூபாயில் இருந்து 224 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது நாளை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.