Advertisment

சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 14 பேர் காயம்: சமயபுரம் அருகே வேன் விபத்து

திருச்சி சமயபுரம் அருகே விபத்து: மாற்றுத்திறனாளிகள் படுகாயம்

author-image
WebDesk
New Update
சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 14 பேர் காயம்: சமயபுரம் அருகே வேன் விபத்து

14 Differently abled persons injured on accident near Trichy: திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 14 மாற்று திறனாளிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நாளை 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து 140 மாற்றுத்திறனாளிகள் வேன், பஸ் போன்ற வாகனங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை 1 மணி அளவில் திண்டுக்கல் நிலக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: ’பெண்கள் இப்படி இருந்தால்தான்.. வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்’ : திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அப்போது 20 பேர் மாற்றுத்திறனாளிகள் பயணித்த வேன் சமயபுரம் சுங்க சாவடி அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியது.

இதில் வேன் ஓட்டுநர் மற்றும் வேனில் பயணம் செய்த 14 மாற்றுத் திறனாளிகளும், படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் வாகனம் உதவியுடன் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

க. சண்முகவடிவேல் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment