Advertisment

புதுச்சேரி சட்டமன்றத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

மே 1-ம் தேதி முதல் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என சபாநாயகர் செல்வம் இன்று அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
Pudhucherry assembly

Pudhucherry assembly

புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்பட வேண்டி, வருகின்ற மே மாதம் முதல் சட்டமன்ற வளாகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என இன்று (மார்ச் 29) சட்டமன்றத்தில் சபாநாயகர் செல்வம் அறிவித்தார். இது குறித்து அவர் சட்டமன்றத்தில் பேசுகையில், "சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

Advertisment

பிளாஸ்டிக் தூக்கு பைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்கள், தெர்மாகோல் தட்டுகள், உணவுப் பொருட்களை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொண்ட மிட்டாய்கள், ஐஸ்கிரீம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தெர்மாகோல் அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் முள் கரண்டி,சிறிய பேக்கேஜிங் போர்த்தி தாள்கள், இனிப்பு பெட்டிகள், ழைப்பிதழ் அட்டைகளை சுற்றி பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளஸ்க்கு பேனர் என மொத்தம் 14 பொருட்கள் சட்டமன்ற வளாகத்திலும், சட்டமன்ற அலுவலகத்திலும் பயன்படுத்தக் கூடாது.

publive-image

மே 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த சட்டமன்றம் சுற்றுப்புறச் சூழலுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் இன்று அறிவிக்கிறேன். இதற்கு எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Puducherry Puducherry Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment