Advertisment

12-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பஸ்கள்: புறப்படும் இடங்கள், முன்பதிவு மையங்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14 வரை, சென்னையில் தினமும் இயங்கும் 2,100 வழக்கமான பேருந்துகளுடன், 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
12-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பஸ்கள்: புறப்படும் இடங்கள், முன்பதிவு மையங்கள் அறிவிப்பு

2023ஆம் ஆண்டின் முதல் பண்டிகையான பொங்கலை மக்கள் தங்களது சொந்த ஊரிற்கு சென்று கொண்டாடுவதற்கு வசதியாக ஜனவரி 12 முதல் 14 வரை 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Advertisment

பொங்கல் பண்டிகை முடிந்து வீடு திரும்பும் மக்களுக்காக 15,619 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

publive-image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் செயல்பாட்டிற்கு இயக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை, காவல்துறை, நெடுஞ்சாலையத் துறை ஆகியவற்றை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்குகொண்டனர்.

மேலும், அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14 வரை, சென்னையில் தினமும் இயங்கும் 2,100 வழக்கமான பேருந்துகளுடன், 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, தமிழகத்தின் மற்ற இடங்களில் 6,183 சிறப்பு பேருந்துகள் இயங்கும் வகையில், மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமல்லாமல், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கார் மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, திருப்போரூர் - செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பூந்தமல்லியில் இருந்து ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலத்தில் ஆகிய இடங்களில் இருந்து பெங்களூரு போன்ற இடங்களுக்கு முன்பதிவு செய்து பயணிக்க தற்போது முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வகையில், 10 முன்பதிவு மையங்கள், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் ஜனவரி 12 முதல் 14-ம் தேதி வரை செயல்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Bus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment