Advertisment

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்... ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் டிஸ்சார்ஜ்

இங்கிலாந்தில் இருந்து அண்மையில் வந்த நடிகர் வடிவேலு உட்பட அவரது படக்குழுவினர் சிலர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்... ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் டிஸ்சார்ஜ்

ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 பேரில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisment

இதுதவிர S வகை பாதிப்பு இருப்பவர்களும், ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து அண்மையில் வந்த நடிகர் வடிவேலு உட்பட அவரது படக்குழுவினர் சிலர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மருத்துவமனையில் ஏற்படுத்தியுள்ள வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது, 1.15 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் 50 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நேற்று 610 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இது கடந்த இரண்டு நாள்களை காட்டிலும் அதிகமாகும். அதிகப்பட்சமாக சென்னையில் 171 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், சுமார் 17 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில், 70 விழுக்காடு நபர்கள் இரண்டாம் டோஸ் செலுத்தியுள்ளனர். இன்னமும் 90 லட்சம் மக்கள், இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என சகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுடையோர் எண்ணிக்கையில் 58 விழுக்காடு பேர் முதல் டோஸூம், முழுமையாக தடுப்பூசி செலுத்தியதில் 86 விழுக்காடு பேர் இரண்டாம் டோஸூம் செலுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment