25 year old man tried to marry college senior on moving bus : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் கல்யாணம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 25 வயது மிக்க இளைஞர் ஒருவர் தன்னுடைய கல்லூரி சீனியர் ஒருவருக்கு ஓடும் பேருந்தில் தாலி கட்ட முயற்சி செய்திருக்கிறார். அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் நடைபெற்ற இந்த நிகழ்வால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியது.
ஆம்பூர் கண்ணதாசன் தெருவில் வசித்து வரும் இளைஞர் ஜெகன் அந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆம்பூரில் இருந்து அதே பேருந்தில் அந்த பெண்ணும் பயணித்துக் கொண்டிருந்தார். வாணியம்பாடி பேருந்து நிலையத்தை அந்த பேருந்து நெருங்கிக் கொண்டிருந்த போது தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் கட்ட முயற்சி செய்துள்ளார்.
Lok Sabha passed Citizenship (Amendment) Bill: Who said what
அந்த பேருந்தில் பயணித்த மற்ற பயணிகள் ஜெகனின் முயற்சியை தடுத்து நிறுத்தினர் என்று துணை காவல் ஆய்வாளர் கே.விஜயகுமார் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வாணியம்பாடியில் இருக்கும் தனியார் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் கணக்காராக பணியாற்றி வருகிறார் அந்த பெண். ஜெகனை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
ஜெகன் கல்லூரி படிக்கின்ற காலத்தில் இருந்தே அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் பலமுறை எடுத்து கூறவும் முயற்சி மேற்கொண்டார். ஆனாலும் வயது, சாதி பிரச்சனை ஆகியவற்றை காரணமாக கூறி அந்த காதலை நிராகரித்துள்ளார் அப்பெண். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் ஜெகன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் படித்து அறிந்து கொள்ள
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.