Advertisment

45 மலைப் பாம்புகள், 3 மார்மோசெட்டுகள்: சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் மீட்பு

விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் திணைக்களம் வழங்கிய நாடு கடத்தல் உத்தரவின் கீழ் மீட்கப்பட்ட விலங்குகள் வியாழக்கிழமை (ஜனவரி 12) பாங்காக்கிற்கு நாடு கடத்தப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
45 மலைப் பாம்புகள், 3 மார்மோசெட்டுகள்: சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் மீட்பு

சென்னை விமான நிலையத்திற்கு, பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட நாற்பத்தி ஐந்து மலைப் பாம்புகள், மூன்று மார்மோசெட்டுகள், மூன்று நட்சத்திர ஆமைகள், 8 சோளப் பாம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

publive-image

புதன் கிழமை (ஜனவரி 11) விமான நிலையத்தில் பேக்கேஜ் க்ளைம் பெல்ட்டுக்கு அருகில் இரண்டு கவனிக்கப்படாத பேக் பேக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில் இருந்த அயல்நாட்டு விலங்குகள் பிறகு மீட்கப்பட்டன.

விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் திணைக்களம் வழங்கிய நாடு கடத்தல் உத்தரவின் கீழ் மீட்கப்பட்ட விலங்குகள் வியாழக்கிழமை (ஜனவரி 12) பாங்காக்கிற்கு நாடுகடத்தப்பட்டன.

"மீட்கப்பட்ட வனவிலங்கு இனங்கள் 12.01.23 அன்று விலங்குகள் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் துறையால் வழங்கப்பட்ட நாடுகடத்துதல் உத்தரவின் கீழ், FD-154 மூலம் பாங்காக்கிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளன" என்று சென்னை சுங்கத்துறை ட்வீட் செய்தது.

கடந்த சில மாதங்களாக, சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விலங்குகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. நவம்பரில், இரண்டு பிக்மி மர்மோசெட்டுகள் மற்றும் இரண்டு டஸ்கி லீஃப் குரங்குகள் வந்த பயணி ஒருவரின் சாமான்களில் கண்டெடுக்கப்பட்டன.

முன்னதாக ஆகஸ்ட் மாதம், ஒரு டிப்ராஸா குரங்கு, பதினைந்து கிங்ஸ்னேக்ஸ், ஐந்து பந்து மலைப்பாம்புகள் மற்றும் இரண்டு அல்டாப்ரா ஆமைகள் ஒரு பயணியின் லாஃகேஜில் சோதனையின் போது மீட்கப்பட்டது.

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment