Trichy Special Camp prisoners | Indian Express Tamil

திருச்சி சிறப்பு முகாமில் கைதிகளிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல்

நண்பகல் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

5 cell phones seized from prisoners in Trichy Special Camp
திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் கே.கே.காவல் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு முகாமில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், கள்ள பாஸ்போர்ட், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட குற்ற வழக்கில் ஈடுபட்ட கைதிகள், மற்றும் இலங்கை தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இம் முகாமில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இந்த சோதனை தொடர்பாக 5 பேரை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் கே.கே.காவல் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு முகாமில் இன்று (ஜன.28) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நண்பகல் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக செல்போன்கள், லேப்டாப்புகள் பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இன்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 5 cell phones seized from prisoners in trichy special camp