Advertisment

பொங்கல் பண்டிகை; வெறிச்சோடிய சென்னை: 3 நாட்களில் அரசுப் பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்

இந்த முறை பொங்கலுக்கு தொடர்ந்து 9 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
TNSTC special buses 930 ready for puja holidays Tamil News

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக 4 நாட்கள் விடுமுறை விடப்படும். 

Advertisment

ஜன.13 போகிப் பண்டிகை,  ஜன.14 தைப் பொங்கல்,  ஜன.15 மாட்டுப் பொங்கல்,  ஜன.16 உழவர் திருநாள் என 4 நாட்கள் விடுமுறை விடப்படும். இம்முறை பொங்கல் தொடக்கத்திலும், பொங்கல் முடியும் நாட்களில் வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 9 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக பேருந்துகள் இயக்கப்பபட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து மட்டும் 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

போக்குவரத்து துறை அறிக்கைபடி, கடந்த 10/01/2025 முதல் 12/01/2025 இரவு 24.00 மணி வரை 11,463 பேருந்துகளில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 6.40 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதே போல ரயில், ஆம்னி பேருந்துகள், கார்களிலும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment