Advertisment

சென்னை மனநல காப்பகவாசிகளுக்கு இடையே திருமணம்; 228 ஆண்டுகளில் முதல் முறை

தங்களைப் பற்றி எதுவும் தெரியாமல் வந்து, இன்று திருமண வாழ்க்கைக்குள் நுழையும் சென்னை மனநலக் காப்பகவாசிகள்; 228 ஆண்டு கால வரலாற்றில் முதல் திருமணம்

author-image
WebDesk
New Update
சென்னை மனநல காப்பகவாசிகளுக்கு இடையே திருமணம்; 228 ஆண்டுகளில் முதல் முறை

Arun Janardhanan 

Advertisment

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனநலக் காப்பகத்தில் (IMH) அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால், பல மாதங்களாக, அவர்கள் ஒரு பிணைப்பை உருவாக்கி, ஒன்றாக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான கனவைப் பகிர்ந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை, பி. மகேந்திரன் (42) தீபா (36) என்பவரை அருகில் கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார். இது IMH இன் 228 ஆண்டுகால வரலாற்றில் காப்பகவாசிகளின் முதல் திருமணத்தைக் குறிக்கிறது.

உறவினர்களுக்கிடையிலான கடுமையான சண்டைக்கு மத்தியில் தனது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்த கவலைகள் மற்றும் அச்சம் காரணமாக மகேந்திரனின் வாழ்க்கை நிறுத்தப்பட்டது. 2016 இல் தனது தந்தையின் மரணம் மற்றும் அவரது தாய் மற்றும் தங்கை இருந்தபோதிலும், அவரது சொந்த வீட்டில் அவர் அனுபவித்த அந்நிய சூழ்நிலையால் தீபாவிடம் நீண்டகால வருத்தம் இருக்கலாம்.

இதையும் படியுங்கள்: பணியில் இருந்த தலைமைக் காவலர் உதவியுடன் பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் பிரசவம்

இருவரும் IMH வளாகத்திற்கு வந்தது குறித்து அவர்களுக்கு நினைவில் இல்லை. சிகிச்சை முடிந்த பிறகும், எங்கும் செல்ல இயலாதவர்கள், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவ யாரும் இல்லாதவர்கள் என IMH இல் உள்ள பலரில் இவர்களும் அடங்குவர்.

சில மாதங்களுக்கு முன்பு, அவர்களின் குழப்பமான மனம் இயல்பு நிலைக்கு வந்ததால், அவர்கள் "ஹாஃப் வே ஹோம்" க்கு மாற்றப்பட்டனர். அது சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் செல்ல முடியாமல் "பாதிவழியில்" இருப்பவர்களுக்கான வளாக கட்டிடம்.

மகேந்திரன், சென்னையில் தனது ஆரம்ப ஆண்டுகளில் தனது மூத்த சகோதரியால் வளர்க்கப்பட்டவர், தற்போது பகல் நேரத்தை தனியாக செலவழிக்க உதவி தேவைப்படுபவர்கள் வரும் இடமான வளாகத்தில் உள்ள ஒரு தினப்பராமரிப்பு மையத்தில் பணிபுரிகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பலவீனமான பிரிவினரை வேலைக்கு அமர்த்துவதற்காக உணவக உரிமையாளர் எம் மகாதேவனின் சென்னை மிஷனுடன் இணைந்து IMH ஆல் தொடங்கப்பட்ட கஃபே R'vive என்ற சமூக கஃபேவில் தீபா பணிபுரிகிறார்.

மகேந்திரன் தீபாவிடம் தனது உணர்வுகளை ஒப்புக்கொண்டது ஒரு மனக்கிளர்ச்சியான நடவடிக்கை என்று ஒப்புக்கொள்கிறார், ஆனால் பல மாதங்களாக அந்த முடிவு வடிவம் பெற்றது என்கிறார். தீபாவிற்கு, பெண் வார்டின் வார்டு எண் 20 இல் இருந்து, "ஹாஃப்வே ஹோமு" க்கு இடம் மாறுவது, குழப்பமான நேர உணர்வில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டறிவதாகவும் இருந்தது.

IMH வளாகத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய தீபா, தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை என்று கூறுகிறார். “நீங்கள் வார்டில் இருந்தால், தங்களைப் பற்றி எதுவும் தெரியாத நோயாளிகள் இருக்கிறார்கள், சிலர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், சிலர் துக்கம் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். அவர் என்னை திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை எப்போது முதலில் சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. பின்னர், நான் வீட்டிற்குச் சென்றேன், அவர் விஷயங்களை இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவர் என்று நான் உணர்ந்தப்போது, மீண்டும் வளாகத்திற்கு திரும்பினேன்,” ​​​​என்று தீபா கூறுகிறார். அப்போது மகேந்திரன் பிரபலமான திரைப்படப் பாடலான “கல்யாண மாலை” பாடலை பாடுகிறார். இந்த பாடல் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடியது, பாடல் திருமண வாழ்க்கையின் பல அடுக்குகளை சித்தரிக்கிறது.

"நாங்கள் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குகிறோம். சரியாகச் சாப்பிடவில்லை என்று நான் கோபப்பட்டாலும் அல்லது உங்களைத் திட்டினாலும், என்னைத் தவறாக நினைக்காதீர்கள், அது உங்கள் ஆரோக்கியத்திற்காக, ”என்று அவர் பாடி முடித்தவுடன் அவளிடம் கூறுகிறார். "அவளைச் சந்தித்துப் பழகுவது எனக்குப் பல விஷயங்களைப் புத்துயிர் அளிப்பது போல் இருந்தது... அவள் என் அம்மா, என் அத்தை, என் சகோதரி, என் சிறந்த தோழி, இப்போது எல்லாம்..." என்று அவர் மேலும் கூறுகிறார்.

228 வருடங்களில் ஒரு காப்பகவாசி திருமணம் கூட ஏன் நடக்கவில்லை என்று கேட்டால், IMH இயக்குனர் டாக்டர் பூர்ணா சந்திரிகா சிரிக்கிறார். "பாருங்கள், இது நகரத்திற்குள் ஒரு சிறிய கிராமம் அல்லது நகரம் போன்றது, மேலும் இது வெளி உலகத்திலிருந்து வேறுபட்டதல்ல," என்று அவர் கூறுகிறார். "முதுகலைப் பட்டதாரி மாணவர்களின் திருமணங்கள் இருந்தன, ஆனால் காப்பகவாசிகள் இங்கு தொடர்புகொள்வது அரிது. அவர்களின் (மகேந்திரன் மற்றும் தீபா) உறவு முதலில் என்னிடம் ஒரு புகாராக வந்தது. அவர்கள் எப்போதும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள். சில கட்டுப்பாடுகளை விதித்தேன். ஆனால் அது அவர்களுக்கு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தேன். இது இங்கே எப்படி சாத்தியம் என்று நான் ஆச்சரியப்பட்டேன்… ஆனால் கடைசியாக நான் அவளை உட்கார வைத்து பேச வைத்தபோது, ​​அவள் ஏன் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும், அது அவளுக்கு எப்படி செழிக்க உதவும், எப்படி பலமுறை யோசித்திருக்கிறாள் என்று அவள் என்னிடம் சொன்னாள்,” என்று இயக்குனர் கூறினார்.

"சிறைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள மற்றவர்களைப் போலல்லாமல், 'ஹாஃப் வே ஹோம்' காப்பகவாசிகள் தங்களுடைய சொந்த தொலைபேசிகள், வங்கிக் கணக்குகள் அல்லது ஒரு வாழ்க்கையை வைத்திருக்க முடியும்... அவர்கள் வெளியில் வேலைக்குச் செல்லலாம் அல்லது திரைப்படம் பார்க்கலாம்," என்கிறார் டாக்டர் சந்திரிகா. ஊனமுற்றோர் உரிமைக் கூட்டணி அவர்களின் வருமானத்தைச் சேமிக்கவும் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கவும் உதவுகிறது. "சில நேரங்களில், அதிகமாகச் செலவழிப்பதை நிறுத்துவதற்கு நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

“ஆரம்பத்தில் நான் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் தடை உத்தரவு இருந்தபோதிலும், இப்போது காதல் வென்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு, அவர்களால் வளாகத்தில் வாழ முடியாது. அதை எப்படி அவர்களிடம் சொல்வது என்று எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது… ஆனால் அவர்கள் ஏற்கனவே வளாகத்திற்கு அருகில் ஒரு வீட்டைத் தேடுவதாக தீபா சொன்னாள், எனவே நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கலாம். மகேந்திரன் ஏற்கனவே எங்கள் தினப்பராமரிப்பு மையத்தில் வேலை செய்கிறார், மேலும் வெளியில் ஒரு சிறிய பகுதி நேர வேலையும் செய்கிறார், ”என்று டாக்டர் சந்திரிகா கூறுகிறார்.

"மனநோய் நீரிழிவு நோய் போன்றது, நீங்கள் அதை நிர்வகிக்க வேண்டும், வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டும், மேலும் சிறிது காலம் மருந்துகளை உட்கொள்ளலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, மருந்துகளுக்கு அப்பாற்பட்ட அன்பும் வாழ்க்கையும் அவர்கள் சிந்திக்கக்கூடிய சூழலைப் பற்றியது. மகேந்திரனும் தீபாவும் இதை இங்கு சாத்தியப்படுத்தியதில் IMH இல் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள், ”என்று டாக்டர் கூறுகிறார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையான IMH, மனநோயால் பாதிக்கப்பட்ட 20 ஐரோப்பியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிழக்கிந்திய நிறுவனத்தால் 1794 இல் நிறுவப்பட்டது. தற்போது, ​​246 பெண்கள் உட்பட 723 காப்பகவாசிகள் உள்ளனர். இது ஆயுதமேந்திய பணியாளர்களால் பாதுகாக்கப்படும் வசதியையும் கொண்டுள்ளது, இதில் குற்றப் பின்னணி கொண்ட 23 ஆண்களும் இரண்டு பெண்களும் அடைக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளில், IMH சுமார் 20 நோயாளிகளைப் பெறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தினரால் கொண்டு வரப்படுகின்றனர், மேலும் குறைந்தது நான்கைந்து பேர் ரயில்வே அல்லது மாநில காவல்துறையினரால் கொண்டு வரப்படுகின்றனர்.

உலகத்திற்கு உள்ள கேள்விகள் என்னவென்றால், பெரும்பாலும் குடும்பங்கள் சுற்றியிருக்கும் போது, ​​அவர்களில் பெரும்பாலோர் ஏன் IMH இல் சேர்கிறார்கள், ​​மகேந்திரனும் தீபாவும் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள்? ஏன் சேர்ந்து வாழக்கூடாது? டாக்டர் சந்திரிகா மீண்டும் சிரிக்கிறார். மேலும், "எனக்கும் இதே போன்ற எண்ணங்கள் இருந்தன, ஆனால் நம் சமூகம் இன்னும் அத்தகைய யோசனைகளைத் தழுவிக்கொள்ளவில்லை. அவர்கள் சாதாரண மக்கள், சாதாரண வாழ்க்கையை விரும்புகிறார்கள், ”என்றும் டாக்டர் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment