Advertisment

'தனி நாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்': ஸ்டாலின் முன்னிலையில் ஆ.ராசா பேச்சு

எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள் என்று திமுக எம்பி ஆ. ராசா நிகழ்ச்சி ஒன்றி பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
'தனி நாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்': ஸ்டாலின் முன்னிலையில் ஆ.ராசா பேச்சு

எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள் என்று திமுக எம்பி ஆ. ராசா நிகழ்ச்சி ஒன்றி பேசியுள்ளார்.

Advertisment

நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டை  மேட்டில் திமுக  சார்பில், தமிழக முதலமைச்சர்  மு. க.ஸ்டாலின்  தலைமையில்,  நகர்ப்புற உள்ளாட்சி  பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, திமுக உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப. வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் – என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் அந்தந்த தலைப்புகளில் உரையாற்றினர். மக்களோடு நில் மக்களோடு வாழ் என்ற தலைப்பில் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றினார்.

இந்த கூட்டாத்தில் பேசிய ஆ. ராசா ‘ தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே வாருங்கள். சுதந்திரத் தமிழ்நாடுதான் ஒரே தீர்வு என்று பெரியார் சொன்னார். பெரியாரை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும், எங்களை தந்தையையும் ஒதுக்கிவிட்டு இந்தியா வாழ்க என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அமித்ஷாவுக்கும், பிரதமருக்கும் சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment