ஹவுரங்காபாத்திலிருந்து கந்தர்வகோட்டையில் உள்ள தனியார் பீர் கம்பெனிக்கு காலியான பீர் பாடல்களை ஏற்றிக்கொண்டு இன்று திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி காட்டூர் கைலாஷ் நகர் அருகே வந்தது.
அப்போது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வைத்துள்ள பேரிகார்ட் பகுதியில் திரும்பும்போது லாரி டிரைவர் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் சாலை ஓரம் இருந்த டீக்கடையில் மோதினார்.
இதில், அந்தப் பகுதியில் நின்ற இரண்டு ஐகான் கார் மீதும் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் அந்தப் பகுதியிலிருந்து இருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் மோதி மின் கம்பம் சாய்ந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்தபோது அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை.
லாரி டிரைவர் யாதவ் சிறு காயத்துடன் அவரும் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் காவல் ஆய்வாளர் சந்திரமோகான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து, லாரியை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் லாரி மோதி விபத்துக்குள்ளானதால் அரியமங்கலத்தில் இருந்து திருவெறும்பூர் வரை மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
இதனால் மின்சார வாரியத்திற்கு ஒரு கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் மின்வாரியத் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் ஒரு மணி நேரம் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil