சென்னையை அடுத்த மதுராந்தகம் சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் கருத்தடை சாதனத்தை அகற்ற மதுராந்தகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கருத்தடை சாதனத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதைக் கேள்விப்பட்டு திவ்யாவின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் வருவதுபோல், உயிரிழந்த நபருக்கு பரபரப்பாக மருத்துவம் பார்த்துள்ளனர்.
இதனை செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டாக தெரிவித்த திவ்யாவின் கணவர் இதுவரை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சம்பவம் மதுராந்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/