Advertisment

பிரசவ வலியால் துடித்த இளம் பெண் : ஆம்புலன்சில் பிறந்த அழகிய குழந்தை

அப்போது பலத்த மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு மருத்துவமனை வந்து கொண்டிருந்தனர்

author-image
WebDesk
New Update
பிரசவ வலியால் துடித்த இளம் பெண் : ஆம்புலன்சில் பிறந்த அழகிய குழந்தை

பி.ரஹ்மான். கோவை

Advertisment

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சீலியூர் நீலாம்பதி மலை வாழ்  கிராமத்தை  சேர்ந்தவர் மருதன் (30) கூலித்தொழிலாளியான இவருக்கு சித்ரா (23) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஏற்கனவே ஐந்து வயதில் ஆண் குழந்தை இருக்கிறது இந்நிலையில் சித்ரா இரண்டாவதாக முறையாக கர்ப்பம் அடைந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சித்ராவுக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருதன் காரமடையில் இருந்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர் அதன் பேரில் மருத்துவ உதவியாளர் பாலமுருகன் ஓட்டுநர் அமுதன் ஆகியோர் இரவு 11.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.  

publive-image

அப்போது பலத்த மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தனர் இதில் ஆம்புலன்ஸ் நீலாம்பதி பகுதியில் வரும்போது சித்ராவுக்கு பிரசவ வலி அதிகமாகி ஆம்புலன்ஸ்லேயே அழகிய  பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை அடுத்து தாய் மற்றும் சேய்  இருவரையும் முதல் உதவி சிகிச்சைக்காக சீலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்

பின்னர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாய் சேய் இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உள்ளனர் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment