Advertisment

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியை இங்கு தொடர முடியுமா?

கல்வி நிறுவனங்கள் உக்ரைனில் மூடப்பட்டுள்ளதாலும், போர் தொடர்ந்து நீடித்து வருவதாலும் அவர்கள் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Local Body Polls, DMK, CM MK Stalin, AIADMK, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஸ்டாலின் செயல்பாட்டை உரசிப் பார்க்கும் முதல் தேர்தல், சவால் கொடுக்குமா அதிமுக, AIADMK, DMK vs AIADMK, local body polls, tamilnadu

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இங்கு கல்வியை தொடர அனுமதிப்பது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில் தெரிவித்தார்.

Advertisment

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அந்நாட்டில் மருத்துவக் கல்வி படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்தனர்.

இவர்களை மத்திய-மாநில அரசுகள் பத்திரமாக நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களை பத்திரமாக நாடு திரும்பினர்.

கல்வி நிறுவனங்கள் உக்ரைனில் மூடப்பட்டுள்ளதாலும், போர் தொடர்ந்து நீடித்து வருவதாலும் அவர்கள் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்நிலையில், தேசிய மருத்துவ கமிஷனிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்று உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு மருத்துவக் கல்வியைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தள செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், நடைமுறையில் உள்ள மருத்துவக் கல்வி விதிமுறைகளின் படி, இதுபோன்ற சேர்க்கையை அனுமதிப்பது சாத்தியமில்லை.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை இங்கு தொடர்வதற்காக நடைமுறையில் உள்ள விதிகளைத் திருத்துவது என்பது சரி என்று எனக்குத் தோன்றவில்லை.

இதுகுறித்து இப்போதே விவாதிப்பதும் சரியாக இருக்காது. நாம் காத்திருந்து பார்ப்போம். உக்ரைன் மாணவர்களை பிற நாடுகள் அனுமதிக்க வாய்ப்புள்ளது அல்லது போர் முடிவுக்கு வந்த பிறகு அவர்கள் உக்ரைனில் கல்வியைத் தொடர முடியும் என்றார்.

மார்ச் 18-ஆம் தேதி மாநில தேர்தல் கவுன்சில் இதுதொடர்பாக விவாதிக்கவுள்ளது. இந்தக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கூறுகையில், இந்தியாவில் விதிமுறைகள் தெளிவாக இருக்கின்றன. தேசிய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இதுபோன்ற சேர்க்கையை அனுமதிக்க முடியும். இது சாத்தியமும் இல்லை. இதுகுறித்து பேசுவதும் சரியும் கிடையாது என்று தெரிவித்தனர்.

கொரோனா, விசா பிரச்சனைகள் காரணமாக சீனாவில் மருத்துவக் கல்வி படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் இதேபோன்று ஒரு பிரச்சனையை எதிர்கொண்டனர்.

ஆனால், சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஆன்லைனில் டிகிரி முடிக்கலாம் என்பதால் பெரிதாக பிரச்சனை எழவில்லை என்கிறார் மற்றொரு உறுப்பினர்.

தமிழக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்துகிறது – பாலகுருசாமி

ஆன்லைனில் மருத்துவக் கல்வியை முடித்த மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள முடியாது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் குறித்து உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அது நல்லெண்ணத்தால் ஏற்பட்டது. மேலும் அது ஒரு உணர்ச்சிகரமான அறிக்கை என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment