Advertisment

நீதிபதி சிஎஸ் கர்ணன் வீடியோ சர்ச்சை: வழக்கறிஞர்கள் புகார்

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த செயல் ஒரு கொடூரமான வன்முறைச் செயல் மற்றும் அனைத்து பெண்களின் கெளரவத்திற்கும் அவமரியாதை.

author-image
WebDesk
New Update
karnan justice

முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பத்து வழக்கறிஞர்கள் இந்திய தலைமை நீதிபதி சரத் ஏ போப்டேவுக்கு சனிக்கிழமை கடிதம் எழுதினர். வீடியோவில், நீதிபதி கர்ணன் பெண்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

பிக் பாஸில் சமந்தா: இனிமையான அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்!

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் சில நீதிபதிகள் "சில பெண் நீதிமன்ற ஊழியர்களையும் பெண் நீதிபதிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்" என்றும் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரைக் குறிப்பிடுகிறார் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் மற்றும் ஐபிசியின் 292,354 ஏ மற்றும் 506 பிரிவுகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் ஆர் வைகை, சுதா ராமலிங்கம், அண்ணா மேத்யூ, கீதா ராமசேசன், டி நாகசீலா, டி கீதா, எஸ் தேவிகா, அகிலா ஆர்எஸ், என்எஸ் தன்வி மற்றும் நிவேதிதா மேனன் உள்ளிட்ட பத்து பெண் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

"முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த செயல் ஒரு கொடூரமான வன்முறைச் செயல் மற்றும் அனைத்து பெண்களின் கெளரவத்திற்கும் அவமரியாதை. என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

"நாங்கள் இதை உங்களுக்கு எழுத நிர்பந்திக்கப்படுகிறோம், ஏனென்றால் திரு. கர்ணன் பெண்களை இழிவுபடுத்துவதற்கும் அவர்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்வதற்கும் எந்தவொரு உரிமத்தையும் கோர முடியாது, ஏனெனில் அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர், இல்லையெனில் அரசியலமைப்பு பாதுகாப்பு உள்ளது. எவ்வாறாயினும், அவரது நடவடிக்கைகள் அத்தகைய அரசியலமைப்பு பாதுகாப்புகளை மோசமாக துஷ்பிரயோகம் செய்கின்றன. என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீதிபதி கர்ணன் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

வந்துட்டாங்கல்ல… தீபாவளிக்கு பிளிப்கார்ட் சலுகைகள்

கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதி(ஓய்வு) திருமதி. பானுமதி அவர்களது சென்னை வீட்டில் இதே நீதிபதி கர்ணன் உள்ளிட்ட ஐவர் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்ததும் அதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதி கர்ணன் மற்றும் அவரது உடனிருக்கும் சிலர் நீதிபதிகள், பெண் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் மீது இத்தகைய தரங்கெட்ட தாக்குதல்களை நடத்துவது புதிதல்ல என்பதையும், இது தொடரும் அவலங்களாக மாறுவதையும் நீதித்துறை சார்ந்தோர் அறிவர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment