ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்திருக்கும் நதிகளை மீட்போம் திட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அழிந்து வரும் நிதிகளை மீட்கவும், நிதிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் ஈகா யோகா மைய நிறுவர் ஜக்கி வாசுதேவ் கடந்த செம்படம்பர் 3-ம் தேதி கோவையில் நதிகளை மீட்போம் என்ற பேரணியை தொடங்கினார். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த பேரணியை தொடங்கிவைத்தார். இந்த பேரணி அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் முடிவடைகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நதிகளை மீட்போம்-பாரதம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, நடிகர் விவேக் நதிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். அப்போது, அவர் நதிகளை மீட்பது குறித்து பாடல் இயற்றி பாடல் ஒன்றையும் பாடினார்.