Advertisment

விவேகம் படத்துக்கு கூடுதல் கட்டணம் : நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு

விவேகம் படம் வெளியான போது தியேட்டர்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிமகாக வசூலிக்கப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட்டில் வழக்கு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vivegam - chennai high court - actor Ajith

பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும், விவேகம் படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், திரையரங்குகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசு, திரையரங்குகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநகராட்சி பகுதியில் அதிகபட்சம், 50 ரூபாயும், நகராட்சிகளில், 40 ரூபாயும், பேரூராட்சிகளில் 25 ரூபாயும், கிராமங்களில் 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். இதே போல் பல திரைகள் கொண்ட திரையரங்குகள் 120 ரூபாய் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணையை முறையாக அமல்படுத்தவில்லை. பெரிய நடிகர்கள் நடித்து வெளியிடும் திரைப்படங்கள் வெளியாகும் போது முதல் ஐந்து நாட்களுக்கு இந்த விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தற்போது நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்திற்கு அரசு விதிகளின் படி கட்டணங்கள் வசூலிப்பதில்லை எனவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் இதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம். துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சிறப்பு குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சமீபத்தில் வெளியான விவேகம் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக, 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்க வேண்டும். அந்த திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு செப்டம்பர் 11க்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், 28 திரையரங்குகளுக்கும் உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

Chennai High Court Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment