Advertisment

'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க., ஆதரவு': சட்ட ஆணையத்திற்கு பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க., ஆதரவு': சட்ட ஆணையத்திற்கு பதில்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று நடைமுறைக்கு கொண்டுவர அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதற்கு ஆதரவு அளித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisment

இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை மத்திய சட்டத்துறை ஆணையம் அனைத்து கட்சிகளிடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி இருந்தது.

publive-image

மத்திய சட்டத்துறை ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தில் ஜன.16ஆம் தேதிக்குள் பதில் அனுப்ப வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த முடிவை அரசியல் காட்சிகள் பொதுமக்களின் சார்பில் தங்களது கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த நடைமுறைக்கு பாஜக தீவிர கவனம் செலுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க ஜனவரி 16ஆம் தேதி வரை அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tamil Nadu Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment