Advertisment

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் - ஐகோர்ட்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பாக டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் - ஐகோர்ட்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பாக டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம், மாறன்குளத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜரத்தினம். இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு மனித உரிமை வழக்குகளில் வாதாடியவர்.

வழக்கறிஞர் ராஜரத்தினம் சென்னை ஐகோர்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடு ராத்திரியில் வீட்டிற்கு வந்த போலீசார் தன்னை அடித்து இழுத்துச் சென்றதாகவும், எந்த வழக்கும் பதிவு செய்யாமல் போலீஸ் நிலையத்தில் வைத்து தன்னை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

வழகறிஞரான தன் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக, காவல் உதவி ஆய்வாளர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் எஸ்.பி. அருண் சக்திகுமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வழக்கறிஞர் ராஜரத்தினர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே ராஜரத்தினம் உயிரிழந்தார். ஆனாலும், அவருடைய மனைவி சரோஜா இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளித்துவிட்டதாக தெரிவித்தார்.

மனுதாரர் மறைந்த வழக்கறிஞர் ராஜரத்தினம் மனைவி சரோஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகளை மீறும் போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் சம்பந்தபட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் வழக்கறிஞரை பிடித்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி டி.ஜி.பி., திருநெல்வேலி மாவட்ட முன்னாள் எஸ்.பி. எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும், இந்த வழக்கிற்கு பதிலளிக்க டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், நீதிபதி இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment