புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையை உலுக்கிவருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 70 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.24) நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, அன்னவாசல் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
வேங்கை வயல் கிராமம் அன்னவாசல் ஒன்றியத்தின் கீழ் வருகிறது. இதனால், ஆபரேட்டர், நீர்த் தேக்க தொட்டியை கண்காணிக்கும் பொறுப்பில் அன்னவாசல் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் உள்ளார்.
தொடர்ந்து அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/