Advertisment

ஆளுனர் பிரச்னையில் தி.மு.க-வுக்கு சப்போர்ட்: செல்லூர் ராஜு அதிரடி

ஆளுநரின் செயல்பாடு குறித்து திமுக விமர்சித்து வந்தது, இந்நிலையில் திமுகவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்த அதிமுக

ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்த அதிமுக

ஆளுநரின் செயல்பாடு குறித்து திமுக விமர்சித்து வந்தது, இந்நிலையில் திமுகவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

Advertisment

ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து அதிமுக முன்னாள் ஆமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில் “ ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதை வெளிக்காட்டுவது போல் பேசுகிறார். அவரே பேசுகிறாரா அல்லது அறிக்கை வருகிறதா என்று தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள இயலாது” என்று கூறினார். மேலும் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் நடைபெறும் வார்த்தை போர், மக்களுக்கு பணியாற்றும் செயலை பாதிக்கும் என்று கூறினார்.

இந்நிலையில் உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், “பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைத்து வருவார். அதன்படி இதற்குமுன் தமிழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் போன்ற கல்வியாளர்களை வைத்துதான் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

தற்போது ஆளுநர் மத்திய அமைச்சர்கள் வைத்து பட்டமளிப்பு விழா நடத்த விம்புகிறார். மத்திய அமைச்சர்கள் தேதி தருவதில் தாமதம் ஏற்படுவதால், விழா நடத்தாமல் உள்ளது. இதனால்  9,29,542 மாணவர்கள்  பட்டம் பெறாமல் உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மட்டுமே நடந்திருக்கிறது. மற்ற பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறவில்லை.

பொறியியல் கல்லூரியில், சேர்வதற்கான கவுன்சிலிங் ஜூலை 2ம் தேதி நடைபெறும்.  இந்த வருடம் 18,600 மாணவர்கள் பொறியல் படிப்பிற்காக விண்ணபித்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment