Advertisment

முதல்வருக்கு முழு ஆதரவு: அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனப்பூர்வமாக முழு ஆதரவு தருவோம் என அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ADMK MLA

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனப்பூர்வமாக முழு ஆதரவு தருவோம் என அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

தினகரனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அதிமுக-வில் தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் கடந்த மாதம் 21-ம் தேதி இணைந்தன.

அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வருகிற 12-ம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எம்எல்ஏ-க்கள் சுமார் 30 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. அதேசமயம், முதல்வர் பழனிசாமி, எம்எல்ஏ-க்களை சென்னைக்கு வர உத்தரவிட்டு மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் எம்எல்ஏ-க்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர். கடிதம் அளித்த கையுடன் புதுவை சென்ற அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என டிடிவி தரப்பினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர். அதில், ஜெயலலிதாவின் ஆட்சியை ஒற்றுமையுடன் பாதுகாப்போம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனப்பூர்வமாக முழு ஆதரவு தருவோம் என்ற இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் 111 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் பங்கேற்கும் கூட்டமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment