Advertisment

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடமில்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இ.பி.எஸ் சொன்னது என்ன?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான பன்னீர் செல்வத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது, பழனிசாமிக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.

author-image
WebDesk
New Update
AIADMK SC verdict

AIADMK SC verdict

அருண் ஜனார்த்தனன்

Advertisment

அதிமுகவின் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமியை அங்கீகரித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்த உடனேயே வெற்றி பெற்றதாக அறிவித்த தமிழக முன்னாள் முதல்வர் இ.பி.எஸ், கிளர்ச்சித் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்கப் போவதில்லை என்று மீண்டும் கூறினார்.

பன்னீர்செல்வத்துடன் இனி எந்த தொடர்பும் இல்லை... என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான பன்னீர் செல்வத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது, பழனிசாமிக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது, மேலும் இது மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். தற்போது அக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் இபிஎஸ் - விரைவில் அதன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

நீதிமன்ற உத்தரவு மாநில அரசியலில் ஓரங்கட்டப்பட்ட பன்னீர் செல்வத்துக்கும் கணிசமான அடியை கொடுத்துள்ளது. கட்சிக்குள் ஆதரவு இல்லாத, தேர்தல் அரசியலிலும் பிரபலம் இல்லாத பன்னீர்செல்வம், வியாழன் அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தலைவர்களோ, தொண்டர்களோ இல்லாமல் தனியாக வீட்டை அடைந்தார்.

நீதிமன்ற உத்தரவு வந்தபோது மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறைந்த அதிமுக தலைவர்கள் எம்ஜி ராமச்சந்திரன் மற்றும் ஜெ ஜெயலலிதாவின் பரிசு, அவர்கள் "கடவுளாக மாறியுள்ளனர்" என்று கூறினார்.

இந்த வெற்றி திமுகவின் தீய சக்திகள் மீது மட்டுமல்ல, அவர்களின் பி-டீமாக பணியாற்றியவர்கள் மீதும் உள்ளது என்று வெளியேற்றப்பட்ட கிளர்ச்சித் தலைவர்களைப் பற்றி இ.பி.எஸ் கூறினார். அரசியல் எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில் அதிமுகவுக்கு இந்த தீர்ப்பு வலு சேர்க்கும் என்றார்.

publive-image

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியைத் தொடர அனுமதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பிப். 23, 2023 வியாழன் அன்று கொண்டாடினர். (பிடிஐ)

தற்போது சட்டப் போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், “நாங்கள் ஒருங்கிணைந்த கட்சியாக மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். அவர்களில் ஒரு சிலரை (கிளர்ச்சி மூவர்) தவிர, அதிமுகவில் பணியாற்றிய அனைவரும் மீண்டும் எங்களுடன் இணைவதை வரவேற்கிறோம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சியின்  வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று இ.பி.எஸ் கூறினார்.

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் ஆட்சிக்கு எதிரான போக்கை பயன்படுத்திக் கொள்ள அக்கட்சி விரும்புவதால், சரியான நேரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது என அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜெயக்குமார் கூறினார்.

பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார், “ஜீரோ” என்றார். மேலும், பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சிக்கு திரும்ப எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். கட்சிக்கு எதிராக மன்னிக்க முடியாத செயல்களைச் செய்திருக்கிறார்கள்; அவர்கள் திமுகவின் பி அணியாக விளையாடினர்.

இபிஎஸ்ஸின் வெற்றிக் கொண்டாட்டத்தை தற்காலிகமானது என  நிராகரித்த தினகரன், பாஜகவின் பங்கை சுட்டிக்காட்டி, 2017ல் அதிமுகவை டெல்லியில் இணைத்தது அல்லவா? என்று மறைமுகமாக கூறினார். தனது கட்சியான அமமுக அரசியல் ரீதியாக தொடர்ந்து செயல்படும் என்றும், 2024-ல் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேசிய கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment