Advertisment

முதலமைச்சருக்கு பெரும்பான்மை இல்லை என்பது எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தின் மூலம் தெரிந்துவிட்டது : டிடிவி தரப்பு

முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு என்றும், அதில் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என டிடிவி தினகரன் தரப்பு உறுதி

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Edappadi palanisamy, TTV Dhinakaran, AIADMK

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு என்றும், அதில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 105 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,

சென்னையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பழனியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றிவிட்டு வேறொரு, முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இந்த நிலைபாட்டில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம்.

இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமானால் 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி கூட்டியுள்ள கூட்டத்தில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர் என்பது எங்களுக்கு தெரியாது. எனெனில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒவ்வொரு எண்ணிக்கையை தெரிவிக்கின்றன.

தற்பேதைய கூட்டத்தில் 105 எம்.எல்.ஏ-க்கள் என்றும், 109 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகின்றன. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 110-ஆக இருந்தால் கூட ஆட்சி செய்ய 117 எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தேவை. இந்த நிலையை ஆளுநர் அறிந்திருப்பார் என நினைக்கிறோம். எனவே, ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.

உட்கட்சி விவகாரம் என்று இருந்தால், நாங்களே பேசி தீர்த்துக் கொண்டிருப்போம். நாங்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்து பல நாட்கள் ஆன நிலையிலும், இதுவரை ஆளுநர் எங்களை அழைக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையிலும், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக ஆளுநர் செயல்படுவது போல தெரிகிறது.

நாங்கள் 21 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 பேர் மட்டுமல்லாமல், எங்கள் அணிக்கு ஆதரவாக பலர் ஸ்லீப்பர் செல் போல இருக்கின்றனர். 11-க்கும் மேற்பட்டோர் அந்த அணியில் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அடுத்தகட்டமாக, ஆளுநரை சந்திப்பதா அல்லது குடியரசுத் தலைவரை சந்திப்பதா என்பது குறித்து துணைப் பொதுச்செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்போம்.

ஊழல் ஆட்சி என்று கூறியும், இரட்டை இலையை முடக்கவும் செய்தது ஓ பன்னீர் செல்வம் அணியினர். அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தனர். ஆனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்று கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment