அடுத்த இரண்டு நாட்களில் ஆளுநர் அழைப்பார் என்று நம்புவதாகவும், அவ்வாறு அழைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன் சென்னையில் இன்று செய்தியாளர்களிள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது: சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால், அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்கிறீர்கள். வெளியே சென்றிருந்தால் எம்.எல்.ஏ-க்கள் ஓடிவிட்டார்கள் என்கிறீர்கள். முகூர்த்த நாள் என்பதால், எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உங்கள் தரப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?
எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மட்டுமல்லாமல், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டுகிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டவேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை. முறைப்படி கூட்டுவதாக இருந்தால் துணைப்பொதுச்செயலாளர் தான் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்ட வேண்டும். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எனவே, அந்த கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்றார்.
மாணவி அனிதா தற்கொலை
மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், துக்க நிகழ்வில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். ஆனால், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எங்கு சென்றனர்? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திமுக நடத்தும் கூட்டத்தில் அரசியல் ஆதாயம் இருப்பதாக தெரியவில்லை. எங்களுக்கு அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
2 நாளில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டல் அடுத்தக்கட்ட நடவடிக்கை
அடுத்த இரண்டு நாட்களில் ஆளுநர் எங்களை அழைப்பார் என நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு அழைக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.
தகுதி நீக்கம் செய்வதாக நோட்டீஸ்
முன்னதாக, கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்திருந்தார். அதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது ஏன்? தற்போதைய நிலையில் நாங்கள் அதிமுக எம்.எல்.ஏ-க்களாக அல்லது வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். சுயலாபத்திறகாகவே ஓ பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்துள்ளனர். இதன் நிலை விரைவில் மாறும், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
திமுக கூட்டத்தில் பங்கேற்பதாக திவாகரன் கூறுவது என்பது அவரது தனிப்பட்ட கருத்து. பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் கருத்தின்படியே எங்களின் நிலைப்பாடு அமையும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.