உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடராஜன், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், அவர் சசிகலாவை பார்க்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரல் அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்வதற்காக லண்டனில் இருந்து மருத்துவர் வருகை தந்துள்ளாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் சென்றுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். எனவே, உடல்நலக்குறைவால் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா தனது கணவரை சந்திக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக(அம்மா) பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நடராஜனை காண்பதற்காக சசிகலோ பரோலில் வருவது என்பது நாளை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.