Advertisment

அஜித்தின் 'தக்‌ஷா' அணி 'Drone' ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

தக்‌ஷா மாணவ அணியினர், 6 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அஜித்தின் தக்ஷா அணி

அஜித்தின் தக்ஷா அணி

அஜித் ஆலோசகராக இருந்து வரும் ஆளில்லா விமானங்களை இயக்கும் தக்‌ஷா அணி, உலக ட்ரோன் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

Advertisment

நடிகர் அஜித் குமார், பள்ளிப் பருவத்திலிருந்தே ஏரோ மாடலிங் (aero-modelling) தயாரிப்புகளில் அதிக ஆர்வம் காட்டியவர். இந்த ஆர்வத்தினால், பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் அஜித் இணைந்தார். ஆளில்லா வான்வழி வாகனம் சேலஞ்சில் ‘தக்‌ஷா’அணி ஈடுபட்டுள்ளது. இவர்களுக்கு உதவவும், தயாரிக்கும் முறைகள் பற்றி கற்றுத்தரவும் தன்னார்வத்துடன் நடிகர் அஜித் பங்கேற்றார்.

அவரது மேற்பார்வையில் விமானம் இயக்கும் நுட்பங்களை பயின்ற தக்‌ஷா மாணவ அணியினர், 6 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர்.

இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது.  இந்த பிரிவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்‌ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது.

இந்த நிலையில், டிரோன் ஒலிம்பிக் போட்டிக்கு தற்போது உலக அளவில் மொத்தம் 13 குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 13 குழுவில் நடிகர் அஜீத்தின் தக்ஷா குழுவும் ஒன்று. இந்த டிரோன் போட்டியில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜீத் மற்றும் தக்ஷா குழு உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment