கன்னியாகுமரியில் 1971-ல் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தியின் மேலே நின்று பார்த்தால் கிழக்கு, தெற்கு மேற்கு என மூன்று பகுதிகளிலும் முக்கடல், மூன்று திசைகளிலும் வெள்ளலைக் கூட்டம் துள்ளி வரும் அலைகளின் அழகையும் வடக்கு பகுதி முழுவதும் நிறைந்த தென்னை, வாழை, ரப்பர் மரங்களின் பச்சை வண்ணம் என பார்ப்பதற்கு பச்சை பட்டு விரித்தால் போன்று காட்சியளிக்கும்.
இந்த கலங்கரை விளக்கம் பகுதியின் தரை முதல் விளக்கின் சிம்மிணி இருக்கும் பகுதிக்கு செல்ல பல நூறு படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.
கலங்கரை விளக்கத்தை பார்த்து ரசிக்க விரும்பும் முதிர் வயதினர் படி கட்டுகளை கடந்து செல்வது கடினமாக இருந்தது.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்(2019) கலங்கரை விளக்கம் பராமரிப்பு மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் மின் தூக்கம் (லிஃப்ட்)அமைக்கும் பணியும் தொடங்கியது.
இந்தப் பராமரிப்பு பணிகள் கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகள் பாதிக்கப்பட்டன.
இந்தப் பணிகள் முழுமை பெற்றன. லிஃப்ட் ரெடியாகிவிட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஜன.13) முதல் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படுகிறது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/