Advertisment

சட்டபேரவையில் இ.பி.எஸ் தரப்புக்கு தடை :  தி.மு.க செய்த சதி... சபாநாயகர் அரசியல் செய்கிறார்- இ.பி.எஸ் 

சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்க எடப்பாடி தரப்புக்கு இரண்டு நாட்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில் அது ஒரு நாளாக மாற்ற வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் கேட்டுகொண்டார். இந்நிலையில் தடை ஒரு நாளாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

author-image
WebDesk
New Update
சட்டபேரவையில் இ.பி.எஸ் தரப்புக்கு தடை :  தி.மு.க செய்த சதி... சபாநாயகர் அரசியல் செய்கிறார்- இ.பி.எஸ் 

சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்க எடப்பாடி தரப்புக்கு இரண்டு நாட்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில் அது ஒரு நாளாக மாற்ற வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் கேட்டுகொண்டார். இந்நிலையில் தடை ஒரு நாளாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

”உதயகுமாரை எதிர்கட்சித் துணை தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை துணை செயலாளரகவும் நியமனம்  செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. பின்பு நினைவூட்டும் வகையில்  2 முறை சட்டப்பேரவை தலைவர் அலுவகத்தில் கடிதம்  வழங்கப்பட்டது. நேற்றைய தினம் வரை அவர்கள் சரியான முடிவு எடுக்கவில்லை. முன்னாள் இருந்த அதே நபரை எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர வைத்திருக்கிறார்கள். நடுநிலையாக செயல்பட வேண்டிய சட்டபேரவை தலைவர் அரசியல் செய்கிறார். சட்டமன்றம் என்பது வேறு கட்சி என்பது வேறு. அரசியல் மாண்பை மீறி இருக்கிறார் சட்டமன்ற தலைவர். இதற்கு எதிராக நாங்கள் நீதி கேட்டோம். எங்களுடைய கருத்துக்களை நாங்கள் நியாயமாக  முறையிட்டோம். 

ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. திமுகவின் தலைவர் ஆலோசனைப்படிதான் சட்டப்பேரவைத் தலைவர் செயல்படுகிறார். வேண்டும் என்றே திட்டமிட்டு சதி திட்டம் தீட்டுகின்றனர். திமுகவிற்கு ஆதரவாக எங்களுடைய கட்சியில் இருகின்ற உயர்ந்த பொருப்பாளர் செயல்பட்டு வந்தார் என்று பத்திரிக்கையில் நாங்கள் அடிக்கடி கூறியது உண்மையாகி இருக்கிறது.  அதிமுக பொதுக்குழுவில்  பன்னீர் செல்வம் உள்பட சில நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.  அதற்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோதும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. எனவே அவர்கள் யாரும் அடிப்படை உறுப்பினர்களே இல்லை. இதற்கான ஆதாரத்தையும் நாங்கள் சமர்பித்துவிட்டோம். நீதிமன்ற தீர்ப்பையே சபாநாயகர் மதிக்கவில்லை.” என்று அவர் கூறினார்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment