அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த குத்து சண்டை வீரர் சென்னையில் மரணமடைந்துள்ளார்.
யோரா டேட் என்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் இவர் சீனியர் சர்வதேச குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள சென்ன வந்திருக்கிறார். இந்நிலையில் போட்டியின்போது , கேஷவ் முதல் என்ற எதிர் போட்டியாளர் இவரை குத்தியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். அங்கு வருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிழிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலத்தூர், குத்துச் சண்டை சங்கத்தின் இயக்குநர் சுரேஷ் பாபு பெரியமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
மேலும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், உயிரிழந்த குத்துசண்டை வீரருக்கு உரிய மரியாதை செலுத்தினார் மேலும் அவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவு செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil