Advertisment

பொது இடத்தில் கழிவுகளை கொட்ட அனுமதித்த பி.டி.ஓ: ரூ28 லட்சம் அபராதம்

Chennai Tamil News: சென்னையில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டியதால் பி.டி.ஓ.வுக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
பொது இடத்தில் கழிவுகளை கொட்ட அனுமதித்த பி.டி.ஓ: ரூ28 லட்சம் அபராதம்

Source: Express Photo

Chennai Tamil News: சென்னையில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டியதால் பி.டி.ஓ.வுக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டின் பஞ்சாயத்து யூனியன் தொகுதி வளர்ச்சி அலுவலரிடம், திடக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டியதற்காக, 28 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

publive-image

தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்.ஜி.டி.) எச்சரிக்கை விடுத்தும், உள்ளாட்சி அமைப்பு திடக்கழிவு மேலாண்மை விதிகளை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கொட்டி, அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் விதியை தவறினர்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (டி.என்.பி.சி.பி.) தீர்ப்பாயத்தில் ஏற்கனவே பி.டி.ஓ.வுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், திடக்கழிவு அகற்றும் செயல்முறையை திறம்பட தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மற்ற இடங்களைத் தவிர, சுன்னாபு கொளத்தூர் ஏரியில் உள்ளாட்சி அமைப்பு கழிவுகளை கொட்டுவது கண்டறியப்பட்டதால், அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு செங்கல்பட்டு ஆட்சியருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அணைகளை பலப்படுத்தவும், மேலும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளை வழங்குமாறு மாநில நீர்வளத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். 

வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக அலுவலகர்களுக்கும் மக்களுக்கு கற்பிக்கும்படி உறுதி செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர் வி.இறை அன்புவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment