திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (59). இவர் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
இவர் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்து சில மாதங்களாக ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் யாசகம் பெற்று வந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் இவருக்கு பக்தர்கள் 10 ரூபாயை தானம் செய்தனர்.
அப்போது மற்றொரு பிச்சைக்காரர் முருகேசனுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் முருகேசன் கல்லால் தலையில் அடித்து கந்தசாமியை கொலை செய்துள்ளார்.
இதுப்பற்றி தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் ஈரோட்டை சேர்ந்த முருகேசனை கைது செய்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு ஸ்ரீரங்கம் பகுதியில் பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/