Advertisment

நெஞ்சை பதைபதைக்கு வீடியோ: புது பைக்கில் பெட்ரோல் போட்டவரை பற்றிக் கொண்ட தீ!

இப்படியொரு அசாம்பாவிதம் நிகழ்ந்து அவரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெஞ்சை பதைபதைக்கு வீடியோ:  புது பைக்கில் பெட்ரோல் போட்டவரை பற்றிக் கொண்ட தீ!

நெல்லையில்  புது பைக்கில் பெட்ரோல்  போட்டவருக்கு நேர்ந்த கதி பலரையும்  அதிர்ச்சி அடைய  வைத்துள்ளது.  இதுக் குறித்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

பெட்ரோல் போட வந்தவருக்கு நேர்ந்த கதி;

நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த  ஆல்வின் என்ற இளைஞர் சம்பவதன்று  தன்னுடைய புது பைக்கில் பெட்ரோல் நிரப்ப சென்றிருந்தார்.  ரூ. 1000க்கு பெட்ரோல் போடும்படி சொல்லிவிட்டு வாகனத்திலியே அமர்ந்திருந்தார்.

அப்போது ரூ. 900 க்கு   டேக் நிரம்பி பெட்ரோல் வெளியே  சொட்ட ஆரம்பித்தது. இதை கவனித்த  பங்க் ஊழியர் அவசர அவசரமாக பம்பை வெளியே எடுத்தார்.  இந்நிலையில் பம்பில் இருந்த பெட்ரோல் துளிகள் ஆல்வி மற்றும் வண்டியின் மீது பட, ஏற்கனவே சூடாக இருந்த  பைக் உடனே பற்றி எரிய ஆரம்பித்தது.

இந்த தீ விபத்தில் இருசக்கரவாகனம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.  பைக் மீது அமர்ந்திருந்த இளைஞரின் உடலையும் தீ பற்றிக்  கொண்டது. உடனே  பங்க் ஊழியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை எரித்தனர்.  பைக் ஓட்டிய இளைஞர் ஆல்வின்  தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை பார்த்த பலரும் பயத்தில் உறைந்தனர். அதே போல்  ஆல்வின்  அன்று தான் ஆசை ஆசையாக தனது ட்ரீம் பைக்கை வாங்கி டேங்கை நிரப்ப வெளியே எடுத்து வந்துள்ளார்.

ஆனால், அதற்குள் இப்படியொரு அசாம்பாவிதம் நிகழ்ந்து அவரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tamilnadu Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment