கோவை பீளமேடு ஹோப்ஸ் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் இருந்த சுவரொட்டியை பா.ஜ.கவினர் கிழித்து எறிந்த நிலையில், அங்கு ஒன்று திரண்ட திமுகவினர் அதே இடத்தில் மீண்டும் புதிய சுவரொட்டியை ஒட்டினர்.
கோவை கொடிசியா அருகே பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவினாசி சாலையில் உள்ள மேம்பால தூண்களில் திமுக சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக பா.ஜ.கவினர் மறியல் செய்தனர். மேலும் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் பாஜகவின் போஸ்டர்களும் ஒட்ட அனுமதிக்க வேண்டும் என கூறி போராட்டம் தொடர்ந்தது. மேலும் மறியலில் ஈடுபட்டுள்ள பா.ஜ.கவினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் புகைபடத்துடன் கூடிய திமுக சுவரொட்டிகளை பா.ஜ.கவினர் கிழித்து எறிந்தனர்.

இதனால் போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் இதனையடுத்து சுவரொட்டிகளை கிழித்து ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.கவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் கொடிசியா அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாஜகவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

பீளமேடு ஹோப்ஸ் பகுதியில் பாஜாகவினர் கழித்து முதல்வர் புகைப்படம் அடங்கிய போஸ்டரை ஒன்று திரண்ட திமுகவினர் மீண்டும் ஒட்டினர்.
மேலும் வரும் 16ம் தேதிக்குள் அமைதி குழு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் அதில் பேனர்கள் ஒட்டுவது தொடர்பாக ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

போஸ்டர் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படவில்லை ஏனில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என பாஜகவினர் அறிவித்து போராட்டம் நடத்தி வந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர் .