Advertisment

பாஜக அழுத்தம் கொடுத்தும் பலனில்லை: சசிகலா விலகல் ஏன்?

சசிகலாவின் ஆச்சரியமான இந்த திடீர் முடிவு ஆளும் அதிமுகவுக்கு உதவுவதோடு வாக்குகளைப் பிரிப்பதைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது அவரது அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சியாக வந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
BJP wants vk sasikala in ADMK, admk, vk sasikala, சசிகலா, அதிமுக, அரசியலில் இருந்து விலகிய சசிகலா, பாஜக, டிடிவி தினகரன், sasikala quits from politics, ttv dinakaran

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜனவரி 27ம் தேதி பெங்களூரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, “அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சிக்கு ​​பிரார்த்தனை செய்யுங்கள்” என்று புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

Advertisment

வி.கே.சசிகலா கையெழுத்திட்டிருந்த அந்த 2 பக்க கடிதம் முதலில் ஜெயா டிவியில் வெளியாகி இருந்தது. அந்த கடிதத்தில், ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கு அம்மாவின் ஆட்சியை உறுதிப்படுத்த கடுமையாக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். “நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா (ஜெயலலிதா) நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்று சசிகலா கடிதம் எழுதியுள்ளார். மேலும், தன் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் ஆச்சரியமான இந்த திடீர் முடிவு ஆளும் அதிமுகவுக்கு உதவுவதோடு வாக்குகளைப் பிரிப்பதைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது 2017 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து சசிகலாவுடன் வெளியேற்றப்பட்ட அவருடைய அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு ஒரு அதிர்ச்சியாக வந்திருக்கிறது. மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை தோற்கடித்தார். அதற்கு பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை மார்ச், 2018-ல் தொடங்கினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமமுக 4 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

சசிகலா அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன் சசிகலாவின் முடிவுடன் தான் உடன்படவிலலி என்று கூறினார். “நான் அவருடன் பேச முயற்சித்தேன். அவரை சமாதானப்படுத்தினேன்... இது இப்போது தேவையற்றது என்று நான் அவரிடம் கூறினேன். அரசியலில் இருக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவரது அறிக்கையை வெளியிடுவதை நான் சுமார் 30 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் முடிவெடுப்பதை என்னால் தடுக்க முடியாது, இல்லையா? ” என்று டிடிவி தினகரன் கூறினார்.

முன்னதாக, சசிகலா சிறையில் இருந்தபோது தனியாக நிறுவிய மற்றும் தனியாக ஓடிய அமமுக தேர்தலில் மூன்றாவது முன்னணிக்கு தலைமை தாங்குவார் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். மேலும், புதன்கிழமை, அவருடைய கட்சி மற்ற முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மார்ச் 10ம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். ஆனால், சசிகலாவின் இந்த திடீர் முடிவு தினகரனுக்கு ஒரு புதிய சவாலை அளிக்கும் என்பதால், அதிமுக-பாஜக கூட்டணிக்கு இதை முன்னிலைப்படுத்தவும், கூட்டத்தை நடத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு, அதிமுக தொண்டர்களின் வாக்குகள் பிரிவு ஏற்படுவதைத் தவிர்க்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவை எடுக்க சசிகலாவை வழிநடத்தியது எது என்று தனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரன் கூறினார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சாலை வழியாக 350 கி.மீ தொலைவு பயணம் செய்ய 24 மணிநேரம் ஆனது. பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் அவரை வரவேற்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அவர் சென்னையை அடைந்த நாளிலும், ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கூட, அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார். விரைவில் மக்களை சந்திக்கத் தொடங்குவார் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

“இருக்கலாம், இதன் பொருள் அவருக்கு உரிமை கோர எதுவும் இல்லை… நான் அமமுகவின் தலைவராக இருந்து அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று சொன்னேன். நான் அம்மாவைப் பின்பற்றுபவன் என்று தொடர்ந்து சொல்கிறேன். ஆனால் அவர் (சசிகலா) இப்போது கட்சி ஒன்றுபடவில்லை என்று நினைக்கலாம். அதனால், அவர் சரியான நேரத்திற்காக ஒதுங்கியிருப்பார். இது அனைவரையும் ஒன்றிணைக்க உதவும் என்று அவர் நினைக்கலாம்” என்று டிடிவி தினகரன் கூறினார்.

டிசம்பர், 2016ல் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, சசிகலா கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தனது தலைமைக்கு எதிராக ஒரு அணியை நடத்தியபோது சசிகலா உறுதியாக நின்றார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் பிரிவு தோற்கடிக்கப்பட்டது. மேலும், அவர் தனது விசுவாசியான எடப்பாடி பழனிசாமியை 2017ம் ஆண்டு தொடக்கத்தில் அதிமுக அரசின் முதல்வராக தேர்வு செய்தார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, தனது 4 ஆண்டு கால சிறைத் தண்டனையை நிறைவுசெய்து. கடந்த மாதம் சென்னைக்கு மாறுபட்டவராக திரும்பினார். சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இருப்பினும், தினகரன், அரசியலில் சசிகலாவின் இடத்தில் இருந்து விலகியிருந்தார். இருவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அமமுக உருவாக்கப்பட்டது என்றார். “அவர் சிறையில் இருந்தபோது நான் இந்த கட்சியைத் தொடங்கினேன். நான் கட்சியை உருவாக்கினேன். நான் தேர்தல்களை எதிர்கொண்டேன். இப்போது நாங்கள் ஒரு கூட்டணியை (மூன்றாவது முன்னணி) உருவாக்குகிறோம்” என்று தினகரன் கூறினார்.

மூத்த அதிமுக தலைவர் கே.பி.முனுசாமி, சசிகலாவின் முடிவை வரவேற்றார். தினகரன்தான் அதிமுகவை அழிக்க விரும்பினார் என்று கூறினார். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து கேட்டபோது, “காலம் உங்களுக்கு பதில் சொல்லும்” என்று கூறினார்.

சசிகலா குடும்பத்தின் வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், அவரது முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை. “அவர் அம்மாவுடன் 30 ஆண்டுகளாக வாழ்ந்தார். இப்போது அவர் அம்மாவை இழந்துவிட்டார். அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கணவனை இழந்தார்... அவருக்கு குழந்தைகள் இல்லை, இந்த வயதில் அவரை கவனிக்க யாரும் இல்லை. கட்சியையும் அவர் காப்பாற்ற வேண்டுமானால், அதற்காக அவர் போராட வேண்டியிருக்கும். அவருடைய முழு சக்தியை வீணடிக்கிறார். ஆனால் அதையெல்லாம் அவர் யாருக்காக அடைய வேண்டும்? ” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Bjp Aiadmk Ttv Dinakaran Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment