கும்பகோணம் அருகே கோவிலுக்கு சென்ற பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு, விசிக கட்சியினர் கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள பைரசவர் கோவிலில், இன்று அஷ்டமி சிறப்பு யாகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச்.ராஜா வந்திருந்தார். இந்த யாகம் முடிந்து எச். ராஜா கும்பகோணம் திரும்பும்போது, விசிக-வை சேர்ந்த தொண்டர்கள், அவரது கார் செல்லும் வழியில், கருப்பு கொடி காட்டினர். தொடர்ந்து காவல்துறையின் அங்கு வந்து அவர்களை கலந்து போக சொன்னார்கள்.
இதற்கு முன்பாக வி.சி.க தலைவர் திருமாவளவனை பற்றி எச்.ராஜா தவறாக பேசியது குறிப்பிடதக்கது.