Advertisment

பிரபல நடிகர் பெயரில் போலி கணக்கு; பெண்ணிடம் பணம் பறித்த சகோதரர்கள் கைது

பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கிடைத்தவுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் படங்களை மார்பிங் செய்து, பணம் கொடுக்காவிட்டால் ஆன்லைனில் கசியவிடுவதாக மிரட்டுவார்கள் – போலீஸ்

author-image
WebDesk
New Update
arrest

பிரதிநிதித்துவ படம்

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் நட்பாகப் பழகிய பெண்களிடம் பணம் பறித்ததாக சகோதரர்கள் இருவரை காஞ்சிபுரம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Advertisment

அக்டோபரில் ஒரு பெண்ணிடமிருந்து ஒரு புகாரைப் பெற்றதாகக் கூறிய போலீசார், வளர்ந்து வரும் பிரபல தமிழ் நடிகரின் படத்தைக் கொண்ட ஃபேஸ்புக்கில் உள்ள சுயவிவரத்திலிருந்து அந்தப் பெண்ணுக்கு நட்புக் கோரிக்கை வந்தததாகவும், அது உண்மையாகவே நடிகர் தான் என்று நம்பிய அந்த பெண் அந்த கோரிக்கையை ஏற்று அவருடன் உரையாட ஆரம்பித்தார் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்: விக்டோரியா கவுரி ஐகோர்ட் நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; நாளை விசாரணை

அடுத்த நாட்களில், அந்தப் பெண் தனது மொபைல் எண்ணைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் மறுமுனையில் உள்ள நபருக்கு வாட்ஸ்அப்பில் தனது படங்களையும் வீடியோக்களையும் அனுப்பினார். அந்த நபர் அந்த பெண்ணிடம் பணம் கேட்டதாகவும், அந்தப் பெண் மறுத்ததால், அவர்களது உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் அவரது மார்பிங் செய்யப்பட்ட பிற படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.

அந்த பெண் முதலில் கூகுள் பே மூலம் ரூ.2 லட்சத்தை அனுப்பினார், ஆனால் அந்த நபர் அதிக பணம் கேட்டதை அடுத்து அவர் ஆன்லைனில் புகார் பதிவு செய்தார். அந்த பெண்ணின் புகாரை விசாரிக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்தனர். சில மாத விசாரணைக்குப் பிறகு, ஈரோடு, பி.பி அக்ரஹாரத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட எஸ் அலாவுதீன், 27, மற்றும் அவரது சகோதரர் எஸ் வஹீத், 26, ஆகியோரை கைது செய்தனர்.

இளம் நடிகர்கள்/தொலைக்காட்சி பிரமுகர்களின் போலி சுயவிவரங்களை உருவாக்கி, ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் திருமணமான பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர் நட்பாக பழகியதாக போலீசார் தெரிவித்தனர். பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கிடைத்தவுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் படங்களை மார்பிங் செய்து, பணம் கொடுக்காவிட்டால் ஆன்லைனில் கசியவிடுவதாக மிரட்டுவார்கள், என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, அந்நியர்களிடமிருந்து வரும் நண்பர் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் அல்லது ஆன்லைனில் தெரியாத நபர்களுடன் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று காவல்துறை பெண்களைக் கேட்டுக்கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment