கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 20 எருமை மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் கல்லாறு ரயில்வே கேட் அருகே உள்ள விவசாயி ராஜ்குமார் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விலங்குகளின் தோலில் கொப்புளங்கள் காணப்பட்டது. பின்னர் மாடுகளை பரிசோதித்த கால்நடை மருத்துவர் அதன்மீது ஆசிட் வீசப்பட்டதை உறுதி செய்தார். ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்தத் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
என்னிடம் 45 எருமைகள் உள்ளன, அவற்றில் 20 எருமைகள் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளன. கிட்டத்தட்ட ஆறு மாடுகளால் நடக்க முடியவில்லை. முன் விரோதம் காரணமாக இது நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.
ஒரு வாரத்திற்கு முன்பு, ரவிச்சந்திரனுடன் எனக்கு தகராறு ஏற்பட்டது, அவர் என் கால்நடைகள் அவரது தோட்டத்துக்குள் நுழைந்ததாகக் கூறினார். அவை எங்கள் எருமைகள் இல்லை என்று நாங்கள் சொன்னோம், ஆனால் அவர் அதை நம்பவில்லை, என் மீது கோபமாக இருந்தார்.
எருமைகளின் தோல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளன, அதன் கண்கள் மற்றும் பிற பகுதிகளில் கடுமையான காயங்கள் உள்ளன. அதனால், நடக்க முடியவில்லை,” என ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
காயமடைந்த கால்நடைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராஜுகுமார் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரது புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“